Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொழிற்சாலையில் திருடிய 3 பேர் கைது

டிசம்பர் 02, 2022 12:52

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சொக்கநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு 2 லாரிகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய 12 வாகன டயர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடு போனது. 

இது குறித்து புகாரின் பேரில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினர். இந்த திருட்டு தொடர்பாக வாணியம்பாடி பகுதியில் பதுங்கி இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், வினோத், வசந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்